விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரே போட்டியாளர் அது மாயா மட்டும் தான்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே கமலஹாசனின் ஆதரவு மாயாவிற்கே இருந்து வந்தது. அவர் செய்த எந்த ஒரு செயலையும் அவர் தட்டி கேட்டதே கிடையாது. இதற்கு காரணம் அவர் ஏற்கெனவே கமலுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். எனவே தான் அவர் மாயா செய்யும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டவில்லை என்றும் மாயாவால் நடிகர் கமலஹாசனும் இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார்.
ஒரு கட்டத்தில் இது பிக் பாஸா..? இல்ல மாயா பாஸா..? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது மாயா தான் டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுத்து கமலஹாசன் அர்ச்சனாவின் கையை தூக்கி வெற்றியாளர் என அறிவித்தார். இதை தொடர்ந்து மணி இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
உண்மையாக சொல்ல போனால் மாயா மட்டும் இல்லையென்றால் இந்த சீசனில் கன்டென்ட் கொடுக்க யாருமே இருந்திருக்க மாட்டார்கள். தனது திறமையான விளையாட்டு , விளையாட்டு யுக்தியை பயன்படுத்தி இவர் பல போட்டியாளர்களை வீழ்த்தியுள்ளார். என்னதான் பலர் இவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தாலும் ஒருபுறம் இவரை ஆதரிக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டமும் இணையத்தில் இவருக்கு உள்ளது.
தற்பொழுது மாயா தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை அதிதி பாலனுடன் இணைந்தது தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ அப்ப பூர்ணிமா, friendship… எல்லாம் அவ்வளவுதானா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram