விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சிக்கு ‘ பிக் பாஸ்’. பிக் பாஸ் மக்கள் மத்தியில் முதலில் நல்ல வரவேற்பை பெறவில்லை. பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த சண்டைகள், அன்பு, காதல்,பாசம், கோபம் போன்றவை மக்களை கவர்ந்தது. பிக் பாஸ் பார்க்காதே வீடுகளே இல்லை என்ற அளவிற்கு இந்நிகழ்ச்சி பிரபலமடைந்தது.
இதில் பங்கேற்ற அமீர் மற்றும் பாவணி ஜோடி மிகவும் பிரபலமடைந்தது. இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட பாவனியிடம் அமீர் தன் காதலை தெரிவித்து இருந்தார். பாவனி அவரின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.தனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்று கூறி இருந்தார் .
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மிகவும் கடினமாக உழைத்து, நடனம் ஆடி பிக் பாஸ் ஜோடிகள் டைட்டில் வின்னராக வெற்றியடைந்துள்ளனர் .
மேடையில் டைட்டில் வின்னர் கோப்பையை வாங்கிய இவர்கள் மக்களுக்கு இன்னொரு சந்தோஷமான விசயத்தையும் கூறியுள்ளார்கள். அதாவது அவர்கள் இருவரும் இணைந்து படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களாம் . இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.