![Vijay - Tamizhanmedia.net Vijay](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/12/vijay-busli.jpg)
TRENDING
விஜய் எங்க தலைவர், தலைவர் சொல்றதை நாங்க செய்றோம், யாரோ என்னவோ சொல்லீட்டு போகட்டும் – விமர்சனம் குறித்து புஸ்லி ஆனந்த் பதில்
மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. மழைவெள்ளத்தில் சிக்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில நடிகர்கள் சார்பில் நேரடியாக உதவிகள் செய்யப்பட்டன. சிலர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வரை கொடுத்தனர். அஜீத், விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்தனர். எனினும் நடிகர் விஜய் தரப்பில் இருந்து பெரிய அளவில் பண உதவிகள் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மற்ற நடிகர்கள், ரசிகர் மன்றங்களுக்கு நிதி தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக கூறப்படுகிறது.
![Vijay - Tamizhanmedia.net Vijay](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/12/vijay-bushli.jpg)
#image_title
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்லி ஆனந்த் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இன்று மொத்தம் 25 இடங்களில் பொது இலவச மருத்துவ முகாம்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது. இதற்கான டென்ட் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. மருந்து மாத்திரைகள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் சிகிச்சை தர ஏராளமான டாக்டர்கள், நர்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் நிதி தந்தவர் விஜய்தான்.
![Vijay - Tamizhanmedia.net Vijay](https://tamizhanmedia.net/wp-content/uploads/2023/12/vijay-bushli-1.jpg)
#image_title
விஜயை காண மக்கள் ஆசைப்படுகின்றனர். நான் வந்தாலே 50 பேர், 100 பேர் என திரண்டு வந்துவிடுகின்றனர். எனக்காக வருவதில்லை. விஜய்க்காக வருகின்றனர். இதுவே விஜய் இங்கு வந்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துவிடுவர். அப்புறம் சமாளிப்பது மிகவும் கடினம். அவரை வரவழைப்பது சிரமம் அல்ல. அவரை பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு முக்கியம். எங்களை பொருத்த வரை விஜய் எங்கள் தலைவர். அவர் சொல்வதை நாங்கள் செய்கிறோம். யாரோ என்னவோ சொல்லி விட்டு போகட்டும். அந்த விமர்சனங்களை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை என்று கூறியிருக்கிறார் புஸ்லி ஆனந்த்.