Connect with us

5 வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் சூர்யா பட நடிகை.. சிம்புவை போலவே கேரியரை மீட்டெடுக்க போராடும் ஹீரோயின்..!

CINEMA

5 வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் சூர்யா பட நடிகை.. சிம்புவை போலவே கேரியரை மீட்டெடுக்க போராடும் ஹீரோயின்..!

சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தங்களுக்கு தாங்களே ஆப்புக்கு வைத்துக் கொள்வது வழக்கம் தான். சில சர்ச்சைகளுக்கு ஆளாவது அல்லது சூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரம் தவறி வருவது, நாம் பெரிய நடிகர். நடிகைகள் என்று நடந்து கொள்வது, அதிகாரம் செய்வது போன்ற காரணங்களினால் பலர் சினிமாவை விட்டு காணாமல் போய் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால் சிம்பு இடையில் பல சர்ச்சைகளுக்கு ஆளானார்.

ஆனால் பின்னர் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி சரியாக நடித்து வருகின்றார். அப்படி ஒரு ஹீரோயின் தற்போது மீண்டும் தன்னுடைய கெரியரை சினிமாவில் புதுப்பித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் சூர்யா, விஜய் போன்ற மிகப்பெரிய ஹீரோக்களிடம் ஜோடி போட்டு நடித்து நல்ல ஹோம்லி நடிகை என்ற பெயரை எடுத்தவர் பூமிகா.

   

 

இடையில் ஒரு சினிமாவை விட்டு காணாமல் போனால் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும் இவர் கைவசம் நிறைய திரைப்படங்களை வைத்திருக்கின்றார். பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் ஒரு திரைப்படங்களில் நடித்த பூமிகா இப்போது பல படங்களில் கமிட்டாகி இருக்கின்றார். தற்போது பிரதர், ஸ்கூல் என்ற தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகின்றார்.

ஆரம்பத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் பல பிரச்சினைகள் செய்த இவர் தற்போது எந்த ஒரு சட்டமும் இல்லாமல் இருந்து வருகிறார். தமிழில் ஹாரர் திரைப்படமான ஸ்கூல் என்று திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை இயக்குனர் வித்யாதரன் இயக்குகின்றார். தனது நான்கு வயது மகனுடன் ஷூட்டிங் பாட்டுக்கு வந்த பூமிகா மகனுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாத போதும் கூட ஷூட்டிங் இருக்கு எந்த ஒரு இடையூறும் செய்யவில்லையாம்.

தமிழில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு கொலையுதிர் காலம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் யூ டர்ன் என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார். இப்போது பேய் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் அமைதியாக இருக்கிறாராம். எந்த ஒரு பிரச்சனையும் செய்வதில்லை என்று கூறப்படுகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top