Categories: சினிமா

எல்லா சீன்களிலும் நகைச்சுவை நடிகர்கள் இருந்தால்மட்டும் ஹுயூமர் வந்துவிடாது- தன் படத்தின் குறையைப் பகிர்ந்த பரத்!

Spread the love

தமிழ் சினிமாவுக்கு இயக்குனர் ஷங்கரால் அறிமுகப்படுத்தப் பட்டவர் பரத். பாய்ஸ் படத்தில் ஐந்து பேரில் ஒருவராக தோன்றிய அவரை அதன் பின்னர் தான் தயாரித்த காதல் படத்தில் கதாநாயகனாக்கி வெற்றி படத்தைக் கொடுத்து ஒரு ஹீரோவாக்கினார். அதன் பின்னர் பரத் அடுத்தடுத்து சில ஹிட்ஸ்களைக் கொடுத்து நம்பிக்கை அளிக்கும் ஹீரோவானார்.

தமிழ் மட்டும் இல்லாமல், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார். இவரின் முழு பெயர் பரத் ஸ்ரீனிவாசன் என்பதாகும். திருச்சியில் பிறந்து வளர்ந்த நடிகர் பரத் பயிற்சி பெற்ற நடன கலைஞரும் ஆவார். பட்டியல், எம் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை, வானம், 555, காளிதாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எம் மகன் திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. இது தவிர கூடல் நகர், நேபாளி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் பரத்துக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தன.

இப்படி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த பரத் இப்போது தமிழ் சினிமாவில் வணிகமதிப்பு இல்லாத ஒரு நடிகராகப் போராடிக் கொண்டிருக்கிறார். இப்போது தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் இருக்க வேண்டிய இடத்தில் பரத்தும் இருந்திருக்க வேண்டும். ஆனால் மோசமான மசாலா படக் கதை தேர்வுகளால் பரத் சறுக்கினார். அதேபோல வளர்ந்து வரும் காலகட்டத்தில் சின்னத் தளபதி என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அவர் மேல் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தினார். தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து தற்போது மார்க்கெட்டிலேயே இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் தான் நடித்த சித்தவைத்திய சிகாமணி என்ற படம் ஏன் தோல்வி அடைந்தது குறித்து பேசியுள்ளார். அதில் “சித்த வைத்திய சிகாமணி ரொம்ப சிறப்பான திரைக்கதை. அதை சுந்தர் சி சார் மாதிரி ஒரு இயக்குனர் இயக்கி இருந்தால் அந்த படம் சிறப்பாக வந்திருக்கும்.

அந்த படத்தைக் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. கேட்ட அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களையும் கொடுத்தது. ஆனால் அனைவரும் இருந்தும் காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை. எல்லாக் காட்சிகளிலும் எல்லா நடிகர்களையும் கொண்டுவந்து எதாவது கத்தினால் காமெடி வந்துவிடாது என்பதுதான் நான் அந்த படத்தின் குறையாகப் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 minutes ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

18 minutes ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

30 minutes ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

55 minutes ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

56 minutes ago