“சாபமிட்ட அசிஸ்டன்ட்… கலங்கிய பார்த்திபன்…!” பாக்யராஜ் மறைவில் நடந்த விபரீதம்… அம்பலமான அதிர்ச்சி மெசேஜ்..! திரையுலகில் பெரும் பரபரப்பு…!

Spread the love

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது முதன்மைச் சீடரும் இயக்குநருமான பார்த்திபன் அந்தத் துயரத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறார். பாக்யராஜின் இறுதிச்சடங்கில் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே முன்னின்று, மருத்துவமனையிலிருந்து உடலைக் கொண்டு வருவது முதல் இறுதி ஊர்வலம் வரை சாந்தனுவுக்குத் துணையாக அனைத்துப் பொறுப்புகளையும் பார்த்திபன் கவனித்துக் கொண்டார். மேலும், தனது குருவுக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்த விரும்பிய அவர், நள்ளிரவில் ஒரு கலை இயக்குநரை அழைத்து, “அன்புடன் உங்கள் கே. பாக்யராஜ்” என்ற கையெழுத்து வடிவ அஞ்சலி அட்டையைத் தயாரித்து இறுதிவரை குருவின் உடலோடு இருக்கச் செய்தார்.

இந்தச் சூழ்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பார்த்திபன் பகிர்ந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பாக்யராஜின் குழுவில் முன்னர் பணியாற்றிய நபர் ஒருவர், பார்த்திபனுக்கு மிகவும் கடுமையான சொற்கள் அடங்கிய குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நீதான் பாக்யராஜை பெத்து வளர்த்த மாதிரி எல்லா வேலையும் செய்ற… யாரையும் மதிக்க மாட்டே. அதனால்தான் நீ பொண்டாட்டி, பிள்ளை இல்லாம கஷ்டப்படுற. இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் செத்துப் போவ, உனக்கு யாருமே வரமாட்டாங்க” என்று பார்த்திபனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்கும் வகையில் அவதூறான வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மனதை ரணமாக்கும் அந்த வசைபாடலுக்குப் பார்த்திபன் நேரடியாக எந்தப் பதிலும் அளிக்காமல், அந்த மெசேஜை சாந்தனுவிடம் மட்டுமே காட்டியதாகத் தெரிவித்துள்ளார். குருவை இழந்த தவிப்பில் சுயநலமின்றிப் பணியாற்றிய ஒரு கலைஞனுக்கு, இப்படிப்பட்ட இழிவான விமர்சனம் வந்திருப்பது சினிமா ரசிகர்களிடையேயும் நெட்டிசன்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “இத்தனை பெரிய துயரமான நேரத்தில், அஞ்சலி செலுத்த ஓடிவந்த ஒருவரை இப்படி அநாகரிகமாகப் பேசலாமா?” என்று இணையவாசிகள் பலரும் அந்த நபருக்கு எதிராகத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

1 second ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

4 minutes ago

வைகோ Vs திருமாவளவன்… தவெக கூட்டணியின் ‘அந்த’ முக்கிய பதவி யாருக்கு?… CM விஜய் எடுக்கும் அதிரடி முடிவு… தவெக வில் நடக்கும் ரகசிய யுத்தம்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…

4 minutes ago

சிபிஐ கையில் இருக்கும் வழக்கை கையில் எடுத்த திமுக.. அடுத்த விக்கெட் இவர்தானா?…. ஆதவ் அர்ஜுனாவின் ஒற்றை பேச்சால் ஆடிப்போன தமிழக அரசியல்…..!

கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…

9 minutes ago

போடு ரகிட ரகிட… இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…

22 minutes ago

21 வயது பெண்ணின் மாடலிங் ஆசை… Whatsappல் வந்த அந்த ஒரு லிங்க்… சைபர் சைக்கோ செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!

பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…

26 minutes ago