Categories: சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் முதலாக சாவித்ரியைப் பார்த்து ஷாக் ஆன பாக்யராஜ்.. தன்னை அறியாமல் கண்ணீர்விட்டு அழுகை..

Spread the love

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.

சாவித்ரிக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசமே சாவித்ரி ஒரு பல்துறை வித்தகர் என்பதுதான். தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவு செய்து பிரதாப்தம் என்ற பெயரில் படம் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இப்படம் படுதோல்வி அடைந்ததால் உடன் இறந்தவர்கள் சதி செய்து ஏமாற்றி சென்றனர் . இதனை அடுத்து விட்ட பணத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக தனது வீடு சொத்துக்களை விற்று மேலும் மேலும் படங்களை தயாரித்தவர் இறுதி காலகட்டத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து கடனில் சிக்கினார்.

தொடர் தோல்விகளால் காதல் கணவர் ஜெமினி கணேசனோடும் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் . தொடர் நஷ்டம், சினிமா வாய்ப்புகள் இல்லாமை என விரக்தியில்  குடிப்பழக்கத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் அவர் குடிக்கு அடிமையாகவே ஆகிவிட்டார். இதனால் அவருக்கு நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு ஆளே உருமாறியுள்ளார்.

நல்ல ஆரோக்யமான தேகத்துக்கு படங்களில் நடித்து வந்த அவர் இறுதிகாலத்தில் மிகவும் ஒல்லியாகி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமாக பாக்யராஜ் ஒரு நேர்காணலில் கூறிய தகவல் குறிப்பிடத்தக்கது. பாக்யராஜ் முதல் முதலாக ஏழை பணக்காரன் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அந்த படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் சாவித்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பாக்யராஜை இயக்குனர் சாவித்ரியை போய் அழைத்து வா எனக் கூறியுள்ளார். சாவித்ரியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் அவர் அறைக்கு சென்றுள்ளார் பாக்யராஜ். அவர் அறைக்கு சென்று பார்த்தால் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு ஒல்லியாகிக் காணப்பட்டுள்ளார்.

அவரைப் பார்த்த அதிர்ச்சியில் பேச்சுவராமல், கண்கள் கலங்க நின்றுள்ளார் பாக்யராஜ். அவரிடம் ‘என்ன’ என்று கேட்டுள்ளார் சாவித்ரி. ஒன்றுமே பேசமுடியாமல் சில வினாடிகள் பிரமை பிடித்தது போல நின்ற பாக்யராஜ் அப்புறம்தான் ‘ஷாட் ரெடி. டைரக்டர் கூப்பிடுறார்’ எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

vinoth

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

2 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

6 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

15 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

40 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

48 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

1 மணத்தியாலம் ago