![p 2 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/07/p-2.jpg)
CINEMA
ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது முக்கிய சீரியல் ஆக இருக்கிறது. இந்நிலையில் கோபியின் செயலால் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி மன உளைச்சலுக்கு ஆளானார். அவரை அதிலிருந்து மீட்டு கொண்டுவர பாக்யா தனது மாமனார் மற்றும் மகளுடன் இணைந்து கும்பகோணம் கோவிலுக்கு அழைத்து செல்கிறார். அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரியின் நீண்ட கால தோழி சாவித்திரியையும் அந்த இடத்திற்கு வரவழைத்து இருவரையும் பேச வைக்கிறார்.
இதனால் ஈஸ்வரி தனது கஷ்டங்களை மறந்து சாவித்திரியுடன் இளமை கால நினைவுகளை பேசி மகிழ்கிறார். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கோபி தன்னை கொலைகாரி என்று கூறி வீட்டை விட்டு வெளியேற்றவும் காரணமாக இருந்த சூழலில் ஈஸ்வரி மன உளைச்சலில் இருந்து வந்தார். இது அவரது மனநிலை மட்டும் இல்லாமல் உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதை பாக்யா உணர்ந்தார். வீட்டில் பாக்கி இல்லாததால் செழியன் டீ போட்டு தருமாறு கேட்கிறார்.
செல்வியும் வேறு வேலையாக இருந்ததால் ஜெனி டீ போட்டுக் கொடுப்பதற்காக கிச்சனுக்கு செல்கிறார். செழியன் மட்டும் இல்லாமல் செல்வியும் அங்கு அலறி சத்தம் போடுகிறார். ஜெனி சூப்பராக டீ போட்டு எடுத்து வருகிறார். அதனை குடித்துவிட்டு செழியன் முழிக்கிறார் அதே நேரத்தில் எழிலும் உள்ளே நுழைகிறார். அவரும் ஜெனி போட்ட டீயை குடித்துவிட்டு நிற்கிறார். முந்தைய நாள் இரவு அதிகமாக குடித்துவிட்டு தன்னுடைய மகன்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விடும் அளவிற்கு கோபி போதையில் இருந்தார்.
தொடர்ந்து அவர் ராதிகாவையும் தனது அம்மாவையும் திட்டினார். ஒரு கட்டத்தில் கமலாவை பிசாசு என்று கோபி கூறுவதாக அமைந்தது. மறுநாள் இது குறித்து ராதிகா கோபியிடம் கேள்வி எழுப்பினார். கோபி தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்பது போல கூறினார். இடையே பேசும்போது கமலா மீண்டும் ஈஸ்வரியை கொலைகாரி என கூறுகிறார். இதனால் கோபிக்கு கோபம் வந்தது. உடனே தனது மாமியார் என்று பார்க்காமல் கமலாவை அடிக்க கை ஓங்குகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா கோபியின் சட்டையை பிடித்து எப்படி அப்படி செய்யலாம் என சண்டை போடுகிறார். மேலும் தனது அம்மாவிடம் மன்னிப்பு கேட்குமாறு ராதிகா கூறுகிறார். ஆனால் கோபி மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியுடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்வதாக இன்றைய எபிசோடு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.