நீதி மற்றும் கர்மாவின் கிரகம் என்று அழைக்கப்படும் சனி நவம்பர் 28 அன்று தனது நேரடி இயக்கத்தை தொடங்கியது. அது நிலைகள் மாறும் போது ஒவ்வொரு ராசியும் அதன் தாக்கத்தை உணர்கிறது. ஆனால் டிசம்பர் 5ம் தேதி முதல் சனி பலவீனமான நிலைக்கு சென்றுள்ளது. இந்த நேரத்தில் சனி கடுமையான பலன்களை தர முடியாது என்று ஜோதிடம் சொல்கிறது.
இது அனைத்து ராசியினருக்கு என்றாலும் குறிப்பாக சில ராசிகளுக்கு அதிக நன்மைகளை தரும் என்றே சொல்லலாம். இதனால் அனைத்து ராசியினருக்குமே சனியின் தாக்கத்திலிருந்து 78 நாட்கள் நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். சனியின் ஆதிக்கம் டிசம்பர் 5ம் தேதி 0 டிகிரிக்கு குறைந்தது. பிப்ரவரி 20ம் தேதிக்குள் அது மெதுவாக 6 டிகிரியாக வளரும்.
துலாம் ராசி- சனி 4 மற்றும் 5ம் வீடுகளை ஆட்சி செய்து தற்போது 6ம் வீட்டுக்குள் சஞ்சரிக்கிறார். இது ஒரு சக்தி வாய்ந்த இடம். போட்டி தேர்வுக்கு தயாராக உள்ள மாணவர்கள் முன்னேற்றங்களை காண்பார்கள். வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். கல்வி தடைகள் நீங்கத் தொடங்கும் உடல் நலம் மேம்பட தொடங்கும். பல்வேறு நன்மைகள் வந்து சேரும். சம்பள உயர்வு புதிய வேலை கிடைக்கும். கடன்கள் குறையும்.
கும்பம் – கும்ப ராசிக்கு சனி 2வது வீட்டில் இருக்கிறார். செல்வம் பேச்சு குடும்பம் என பரம்பரை ஆகியவற்றின் வீடு. சனியின் பலம் குறையும்போது தேவையற்ற செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். உடல்நல பிரச்சனைகள் மேம்படும். குடும்பத்தில் தகராறுகள் தீர்ந்து அமைதியும் செழிப்பும் ஏற்படும். கும்ப ராசிக்கு சனியின் பார்வை 4, 8 மற்றும் 11ம் வீடுகளில் இருப்பதால் பொருள் ஆறுதல் அதிர்ஷ்டம் மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வருகிறது. அரசியல் மற்றும் பொதுப்பணியில் இருப்பவர்கள் வலுவான ஆதரவை பெறுவார்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் தீரும். மனஅழுத்தம் குறையும்.
மீனம் – மீன ராசியினருக்கு சனி பகவானின் 2ம் பாகமான சனியின் 1வது வீட்டில் அமர்ந்திருக்கும். மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். வேலை வேகமாக நடக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக மாறும். தடைப்பட்ட திட்டங்கள் மீண்டும் கட்டுப்பாட்டில் வரும். திருமணம் செய்து கொள்ள விரும்புவோருக்கு நம்பிக்கைக்குரிய பொருத்தங்கள் ஏற்படலாம். மேலும் உறவுச் சிக்கல்கள் மேம்படும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஒட்டுமொத்தமாக சனியின் மென்மையான செல்வாக்கு வாழ்க்கையை எளிதாகவும் அமைதியாகவும் மாற்றுகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…