#image_title
தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.
இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார். தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மக்னே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன.
அதன் பிறகு கவுண்டமணி செந்திலும் மார்க்கெட்டும் டவுன் ஆக வடிவேலுவின் கொடி உயரப் பறந்தது. போட்டிக்கு விவேக் இருந்தாலும் அவரால் வடிவேலு அளவுக்கு உச்சம் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. வடிவேலு மார்க்கெட் ஏற ஏற அவரின் கர்வமும் அதிகமானது. கூட நடிக்கும் நடிகர்களை மதிக்காதது, தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிவிட்டு இழுத்தடிப்பது, கால்ஷீட் கொடுத்துவிட்டு ஷூட்டிங் வராதது என அவரின் அட்ராசிட்டி அதிகமானது.
அதே போல தன்னோடு நகைச்சுவை காட்சிகளில் நடிப்பவர்களையும் அவமரியாதையாக நடத்துவது, அவர்களுக்கு வேண்டுமென்றே சம்பளத்தைக் குறைவாகக் கொடுப்பது என செய்துள்ளார். அவரோடு சில படங்களில் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார் பயில்வான் ரங்கநாதன். அவர்கள் காம்பினேஷன் நன்றாக வேலை செய்தாலும் அவரை தொடர்ந்து வடிவேலு பயன்படுத்தவில்லை.
இதற்கு அவருக்குத் தன் மேல் உள்ள கோபம்தான் காரணம் என்று பயில்வான் கூறியுள்ளார். மேலும் “வடிவேலுவுக்கு என் மேல் ஏன் கோபம் என்றால், நான் அவர் வீட்டுக்கு சென்றெல்லாம் சான்ஸ் கேட்கமாட்டேன். ஆனால் மற்றவர்கள் அவர் வீட்டில் காத்துக் கிடப்பார்கள். நான் அவருக்கு கும்பிடு போட்டு குழையாததுதான் அவருக்கு பிடிக்கவில்லை. நான் சினிமாவில் பாக்யராஜ் தவிர வேறு யாரிடமும் சென்று சான்ஸ் கேட்டதில்லை” என தனது அருமை பெருமைகளைப் பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…