வட்டி குறைவு… தீபாவளிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… வங்கி கடன் வாங்கியவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

பொதுமக்களின் அவசர தேவைக்காக வங்கி கடன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தை பொறுத்து கடனுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கும். அன்னையில் புதிய ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா, மூன்று முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துவிட்டார்.

இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ஜிஎஸ்டி மறு சீரமைப்பு செய்திருந்தாலும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு முன்பே 5.25 சதவீதமாக உள்ள ரெப்போ வட்டி விகிதம் 5% ஆக குறைக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் தனிநபர் மற்றும் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது.