வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 2026 ஜனவரி 1 முதல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் பெறப்பட்ட வீட்டுக் கடன்களை முன்கூட்டியே அடைப்பவர்களிடம் எந்தவித அபராதக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. வழக்கமாக 2% முதல் 4% வரை வசூலிக்கப்பட்டு வந்த இந்த அபராதக் கட்டண ரத்து, புதிய மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்குப் பொருந்தும்.
இந்த அதிரடி மாற்றமானது தனிநபர்கள் மற்றும் குறு, சிறு நிறுவனங்கள் பெறும் கடன்களுக்குப் பொருந்தும் என ரிசர்வ் வங்கி (RBI) தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், ஃபிக்சட் வட்டி விகிதத்தில் (Fixed Rate) கடன் வாங்கியவர்களுக்கு இந்த அபராதக் கட்டண விலக்கு பொருந்தாது. இந்த புதிய விதிமுறை கடன் வாங்குபவர்கள் தங்களின் கடன் சுமையை விரைவாகக் குறைக்கவும், வங்கிகளிடையே வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…