வெறும் ரூ.35,000 கடனுக்காக… குழந்தைகளுடன் இருந்த இளம் பெண்ணை ரேப் செய்து வீடியோ எடுத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..!

By Nanthini on ஆடி 1, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சிறு குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை அனைவருமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தான் மிகுந்த மனவேதனையாக உள்ளது. இதற்கு எதிராக அரசு என்னதான் கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக்கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் வங்கதேசத்தில் 35 ஆயிரம் ரூபாய் கடனுக்காக பெண் ஒருவர் ரேப் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த ஃபஸர் அலி என்ற நபர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தைகளுடன் பெண் மட்டுமே இருந்த நிலையில் அவரை கொடூரமாக ரேப் செய்து அடித்து துன்புறுத்தியுள்ளார். உடனே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் அந்த கொடூரனை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த கொடூர செயலை வீடியோ எடுத்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.