தமிழ் சினிமாவையே வேறொரு கண்ணோட்டத்தில் காட்டி தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் பாலா. பார்ப்பதற்கு எப்போதும் ரப் அண்ட் டப்பாகவே இருந்தாலும் இவரது படங்கள் அனைத்துமே நின்னு பேசும் அளவில் இருக்கும். இவர் தற்பொழுது நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.
ஆனால் இத்திரைப்படத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யா திரைப்படத்திலிருந்து விலகியது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் அருண் விஜய் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் இயக்குனர் பாலா. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.
முதல் பாகத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி செட்டியே இப்படத்திலும் ஜோடியாக நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஹீரோயினையும் மாற்றி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் பாலா.
அதன்படி கதிர் நடிப்பில் வெளியான ‘ஜடா’ என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்த ரோஷினி பிரகாஷ் என்பவர்தான் அருண் விஜய் உடன் தற்பொழுது ஜோடியாக நடித்து வருகிறாராம். இத்திரைப்படத்தின் படப் பிடிப்பானது இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…
1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…
வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர்…
சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சிகள் அவர்களுக்கு…