Categories: சினிமா

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

Spread the love

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கின்றார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருகிறார். ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசதி வருகின்றார். விஜய்யின் சர்க்கார், விஷாலின் சண்டக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களில் இவரின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த மாதம் இவருக்கும் நிக்கோலை சர்ச்தேவ் என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இவர் யார் என்று பலரும் அலசி ஆராய்ந்து விவரங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்கள். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாகவும் அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள். இது குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

எனக்கு அவருடைய கடந்த கால வாழ்க்கை பற்றி எந்த கவலையும் கிடையாது .அவரைப் பற்றி பலரும் கேலி கிண்டல் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நாங்கள் சரியான பொருத்தம் இல்லை என்று கூறுகிறார்கள். இது என்ன சினிமா படமா? ஹீரோ ஹீரோயின் அழகாக இருப்பதற்கு எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கின்றது. எனது வாழ்க்கை எனது முடிவு என்று பேசி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் அவருடைய முன்னாள் மனைவியிடம் நான் பேசியதாகவும், அவரது மகள் மிகவும் அருமையான ஒரு பெண் என்றும், இந்த வயதில் இவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ஒருவரின் திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து வேறு வாழ்க்கைக்கு செல்வதில் எந்த தவறும் இல்லை. அந்த வாழ்க்கைக்குள் வாழ வேண்டும் என்பது கட்டாயமும் கிடையாது என்று பேசி இருந்தார் வரலட்சுமி.

Mahalakshmi

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

2 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

2 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

3 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago