உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் பாபா பங்கா கணிப்புதான் பெரும்பாலும் உண்மையாக்கப்படுகிறது. பல்கேரியாவை சேர்ந்த இவர் தன்னுடைய அதிசயமான கணிப்புகளால் உலக அளவில் பெயர் பெற்றவர். இவர் தனது 12 வயதில் பார்வை இழந்த பிறகு எதிர்காலத்தை பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாக கூறப்படுகின்றது. அவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் பல முக்கியமான உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து எழுதி வைத்துள்ளார். அதிகம் பேசப்படுவது என்னவென்றால் இவர் கணித்த பல நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது.
இவர் உயிரிழப்பதற்கு முன்னதாகவே ஒவ்வொரு வருடமும் என்னென்ன நிகழ்வுகள் நடைபெறும் என்பதை நுட்பமாக கணித்து அதனை குறிப்புகளாக பதிவு செய்து வைத்துள்ளார். இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் சில முக்கியமான கணிப்புகள் உருவாகத் தொடங்கிவிட்டது. பாபா அவங்க 2025 ஆம் ஆண்டு உலக அழிவின் தொடக்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் 5079 ஆம் ஆண்டு பூமி அழிந்து விடும் என்றும் அப்போது மனிதர்கள் பூமியில் இருப்பதே இல்லை என்றும் அவர் கணித்திருந்தார்.
இதோடு தொடர்புடைய மற்றொரு முக்கியமான கணிப்பு ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பமும் சுனாமியும் ஏற்படும் என்பதுதான். 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை விட இன்னும் மோசமான நிலநடுக்கங்கள் வரக்கூடும் என்று எச்சரித்திருந்தார். இப்படியான நிலையில் ஜப்பான் அரசு, தேசிய பூகம்ப ஆய்வு குழுக்கள் சமீபத்திய அறிக்கையில் அடுத்த 30 ஆண்டுகளில் 7 ரிட்டர் அளவை அல்லது அதற்கு அதிகமான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 82 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் இது முன்னதாக 75 சதவீதமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த கணிப்பு மேலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…
தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க 'கோல்ட் பீஸ்' (Gold…