Connect with us

‘அழகி’ படத்தில் நடித்த நடிகையா இது..? பார்த்தா நம்ப மாட்டீங்க.. எப்படி மாறிட்டாங்க பாருங்களே..!

CINEMA

‘அழகி’ படத்தில் நடித்த நடிகையா இது..? பார்த்தா நம்ப மாட்டீங்க.. எப்படி மாறிட்டாங்க பாருங்களே..!

 

தமிழ் சினிமாவில் நடிக்கும் ஒரு சில நடிகைகள் திடீரென்று சினிமாவை விட்டு விலகி குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகி விடுவார்கள். அவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சில படங்களை பார்க்கும் போது நமக்கு தோன்றும். அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் அழகி படத்தில் நடித்திருந்த நந்திதா தாஸ்.

   

தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான அழகி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நந்திதா தாஸ். இந்த திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கிய நடித்திருப்பார். தமிழில் முதல் படமாக இருந்தாலும் 1989 ஆம் ஆண்டு ‘வர நந்தி’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அடி எடுத்து வைத்தவர்.

1969 ஆம் ஆண்டு மும்பை மாநிலம் மகாராஷ்டிராவில் பிறந்த இவர் படித்ததெல்லாம் டெல்லியில் தான். சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் 2002 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலரான சௌம்யா ஜென் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார் .ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து இவர்கள் பின்னர் பரஸ்பர ஒப்புதல் உடன் 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுத்தருந்தனர்.

அதன் பிறகு மும்பையின் புறப்பகுதியை சேர்ந்த தொழிலதிபரான சுப்தோஸ் மஸ்காராவை காதலித்து வந்த இவர் 2010 ஆம் ஆண்டு மும்பையில் திருமணம் செய்து கொண்டார். நடிகையாக இருந்த இவர் 2008 ஆம் ஆண்டு இயக்கத்திலும் இறங்கினார். இந்தியில் ப்ராக் என்கின்ற படத்தை இயக்கினார், குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது,

சினிமாத்துறை மற்றும் கலை துறையில் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கும் நந்திதா பல ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை, இவர் 2011 ஆம் ஆண்டு தனது கலை பங்களிப்பிற்காக வாஷிங்டனில் நடந்த சர்வதேச மகளிர் மன்ற நிகழ்ச்சியில் முதல் இந்திய பெண்ணாக கவுரவிக்கப்பட்டார், தற்போது சினிமாவில் தலைக்காட்டாமல் இருக்கும் நந்திதா உலக சுகாதார அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அப்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அழகி படத்தில் நடித்த நடிகையா இது? என்று கேட்டு வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top