சின்னத்திரையின் மூலமாகவும், குறும்படங்களின் மூலமாகவும் ,இணையம் மூலமாகவும் இளம் நடிகைகள் எளிதில் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் நுழைகின்றனர். இப்படி சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமாகி ‘காதல் கண் கட்டுதே’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.
2017 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .கிட்டத்தட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு அதுல்யா ரவி ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். இவர் போடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
View this post on Instagram
இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகன், ஏமாளி நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நாடோடிகள் 2 படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்பொழுது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் சாந்தனு உடன் ஜோடியாக நடித்துள்ளார்.
View this post on Instagram
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில் இவர் தற்பொழுது மாடர்ன் அவுட் பிட்டில் தேவதையைப் போன்று இருக்கும் அழகான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.