#image_title
அட்லீ தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான இயக்குனர். தற்போது பான் இந்தியா அளவிலும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ 2013 ஆம் ஆண்டு “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். இந்த மூன்று படமும் வெற்றி படங்களாக அவருக்கு அமைந்தது.
அதைத்தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்கி 2023 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்து அட்லீயை இந்தியா அளவில் பிரபலமாக்கியது. அதைத்தொடர்ந்து மும்பை பக்கமே செட்டில் ஆகிவிட்டார் அட்லீ.
அதைத்தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராக வேண்டும் என்ற முடிவில் அட்லி பாலிவுட்டில் வருண் தவான் கீர்த்தி சுரேஷ் நடித்த “பேபி ஜான்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படம் அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ்க்கு வெளியாகி நல்ல வசூலை பெரும் என்று எதிர்பார்த்த நிலையில் அட்லிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த திரைப்படம் மொத்தமாக 50 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை. ஆனால் அட்லி இந்த திரைப்படத்திற்காக 160 கோடி தயாரிப்பு செலவாக கொடுத்திருந்தார்.
அட்லீ இப்படி தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் பணத்தை கோட்டை விட்டுவிட்டாரே என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இயக்கம் தயாரிப்பை தாண்டி அட்லீ ஸ்போர்ட்ஸ் பக்கம் சென்றிருக்கிறார். World Pickle Ball League என்ற போட்டியில் பெங்களூரு அணியின் ஓனர்ஷிப்பை தனது மனைவியுடன் சேர்ந்து வாங்கி இருக்கிறார் அட்லீ. அந்த அணிக்கு “பெங்களூரு ஜவான்ஸ்” என்று பெயரும் வைத்திருக்கின்றனர் அட்லீ– பிரியா தம்பதி. தற்போது தயாரிப்பில் பணத்தை விட்டது போல இந்த ஸ்போர்ட்ஸிலும் பணத்தை விட்டு விடுவாரோ அட்லீ என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…