#image_title
அட்லீ தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபல இயக்குனர் ஆவார். தற்போது பான் இந்தியா அளவிலும் பிரபலமாக இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக தனது கேரியரை தொடங்கினார் அட்லீ. பின்னர் ஆர்யா நடிப்பில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
2016 ஆம் ஆண்டு விஜயை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து விஜய் உடன் இணைந்து மெர்சல் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். அதற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அடுத்ததாக சல்மான் கானை வைத்து அட்லீ படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அட்லீ இயக்கி வெற்றி பெற்ற தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆக பேபி ஜான் திரைப்படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் வருன் தவான் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மூலமாக பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் அட்லீ. அப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் அட்லீ.
பாலிவுட் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் அட்லீக்கு பேபி ஜான் படத்தை South Side இல் ஸ்கிரீனிங் செய்வதற்கு போதுமான ஸ்கிரீன் கிடைக்கவில்லையாம். டிஸ்ட்ரிபியூட்டர்களும் அமையவில்லையாம். அதனால் அட்லி வளரக்கூடாது அவர் முன்னேறக்கூடாது என்று சதி வேலைகள் நடக்கிறதோ அதனால் வாய்ப்பு தர மறுக்கிறார்களோ என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் நிலவி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…