ரூ.210 முதலீடு செய்தால் போதும்…! வயதான காலத்தில் கைநிறைய பென்ஷன் வாங்கலாம்… அசத்தலான மத்திய அரசு திட்டம்…!

By Devi Ramu on வைகாசி 1, 2026

Spread the love

மத்திய அரசின் ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ (APY) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதுமையில் நிலையான வருமானத்தை உறுதி செய்யும் ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாகும். 18 முதல் 40 வயதுடைய இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் இணையலாம்; இதில் 60 வயதுக்குப் பிறகு மாதம் 1,000 முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெற முடியும். நீங்கள் இத்திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் இணைகிறீர்களோ, அவ்வளவு குறைவான மாதாந்திரத் தவணையைச் செலுத்தினால் போதும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

உதாரணமாக, மாதம் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்பும் ஒருவர் 18 வயதில் சேர்ந்தால் மாதம் 210 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. இதுவே 30 வயதில் சேரும்போது 577 ரூபாயாகவும், 40 வயதில் சேரும்போது 1,454 ரூபாயாகவும் உயர்கிறது. சந்தாதாரர் மறைந்தால் அவரது துணைவருக்கும், இருவருமே மறைந்தால் நாமினிக்கு மொத்தத் தொகையும் சென்றடையும் என்பதால், இது குடும்பத்திற்கான பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது.