CINEMA
அசோக் செல்வன் காட்டுல அடமழை தான்.. மீண்டும் தனது ஆஸ்தான இயக்குனருடன் கூட்டணி சேரும் வெற்றி நாயகன்..
கடந்த வருடம் ஜூன் மாதம் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த “போர் தொழில்” யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு திரையில் மாபெரும் வெற்றியைக் கண்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளி குவித்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இப்ப பட வெற்றியை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஜெயக்குமார் அவர்கள் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த “ப்ளூ ஸ்டார்” படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது, நீலம் ப்ரொடக்ஷன் கம்பெனி அதிபர் பா.ரஞ்சித் தயாரிப்பில் எஸ் ஜெயகுமார் அவர்கள் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், இளங்கோ, ஆண்டனி இவர்கள் நடிப்பில் பொங்கல் சமயத்தில் ஜனவரி மாதம் வெளிவந்து திரையில் மாபெரும் வெற்றியைக் கண்டு,
ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை அள்ளி குவித்தது. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகனாக அசோக் செல்வன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பின் திறமையால் பல ரசிகர் கூட்டத்தை தனக்கு பின்னால் கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வரிசையில் இதற்கு முன்னால் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த “போர் தொழில்” இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் அசோக் செல்வன் மீண்டும் இணைய உள்ளார்.
இவர்கள் கூட்டணி என்றாலே திரையில் மிக பிரம்மாண்டமாக தான் இருக்கும். அதனால் இவர்கள் காம்போவில் உருவாகும் அடுத்த படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.