Categories: சினிமா

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்… நீதிமன்றத்தின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

Spread the love

லூதியானாவைச் சேர்ந்த வக்கீல் ராஜேஷ் கண்ணா என்பவர் மோகித் சுக்லா என்பவருக்கு எதிராக ரூ.10 லட்சம் மோசடி வழக்கை தொடர்ந்த நிலையில் முதலீடு செய்ய தூண்டியதாக நடிகர் சோனு சூட் மீதும் வழக்கு தொடரப்பட்டது.  பாலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சோனு சூட். மோசடி வழக்கு தொடர்பாக இவரை கைது செய்ய பஞ்சாப் நீதிமன்றம் கைதுவாரண்ட் பிறப்பித்துள்ளது. லூதியானா நீதித்துறை நடுவர் ராமன்பிரீத் கவுர் இந்த வாரத்தை பிறப்பித்துள்ளார்.

லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் கண்ணா, மோகித் சுக்லா என்பவர் மீது 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில் போலி ரிஜிக்கா நாணயத்தில் முதலீடு செய்ய தன்னை ஈர்த்ததாக அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் நடிகர் சோனு சூட்டுக்கு தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையில் சாட்சி அளிக்க சோனு சூட் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராக தவறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு கைது வாராண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சோனு சூட் முறையாக சமன்கள் அல்லது வாரண்ட் அனுப்பப்பட்டும் ஆஜராக தவறிவிட்டார். அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிமன்ற முத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

3 minutes ago

Breaking: நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய்.. சற்றுமுன் மகிழ்ச்சி செய்தி…!!

நடிகர் விஜய் அவர்கள் 4-வது முறையாக ஆளுநரைச் சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தனது…

7 minutes ago

“காதலனை கட்டிப்போட்டு கொடூரம்” காதலியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பீகாரில் அரங்கேறிய பயங்கரம்..!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குர்ஹானி பகுதியில், காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட…

26 minutes ago

பெரும் பரபரப்பு..! விஜய் ஆட்சியமைப்பதை கவர்னர் தடுக்கிறார்… பெ.சண்முகம் பகீர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்… திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…

1 மணத்தியாலம் ago

BREAKING: மே-11 ஆம் தேதி விஜய் பதவியேற்பு..? ஆளுநர் மாளிகை தகவல்..!!

மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…

1 மணத்தியாலம் ago