“CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு”… மதுரையை உலுக்கிய ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’… நள்ளிரவில் நடந்த அதிரடி வேட்டை… அலறி ஓடிய ரவுடிகள்…!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் சென்னை மற்றும் நெல்லையைத் தொடர்ந்து, தற்பொழுது மதுரையிலும் ரவுடிகள் மீதான அதிரடி கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. காவல்துறையினர் ‘ஆபரேஷன் ஷீல்டுநெட்’ (Operation Shieldnet) என்ற பெயரில் நடத்திய இந்த தீவிர தேடுதல் வேட்டையில், சரித்திர பதிவேடு குற்றவாளிகளான (History Sheeters) 37 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த 105 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்குத் தப்பிக்க வழியில்லாமல், அவர்கள் மீதான வழக்குகளைத் துரிதமாக விசாரித்து நீதிமன்றம் மூலம் விரைந்து தண்டனை பெற்றுத் தரும் வகையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.