#image_title
பழம்பெரும் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான கே.பாலாஜி தமிழ் திரை உலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக பணியாற்றியவர். இவர் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். படித்தால் மட்டும் போதுமா பலே பாண்டியா உட்பட தமிழ் படங்களில் பாலாஜி நடித்துள்ளார். பாலாஜி தயாரித்த பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் ஏ.எல் நாராயணன். பாலாஜி முதலில் அண்ணாவின் ஆசை என்ற படத்தை தயாரித்தார். பின்னர் சிவாஜி கணேசன் நடித்த தங்கை படத்தை தயாரித்தார்.
இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ். சுமார் 10 நாட்களில் இந்த படத்திற்கான வசனத்தை ஆரூர் தாஸ் எழுதி முடித்துவிட்டார். அடுத்தடுத்து தான் தயாரிக்கும் படங்களுக்கான வசனத்தை ஆரூர் தாசன் எழுதி கொடுக்க வேண்டும் என பாலாஜி ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. ஏனென்றால் அதே சமயத்தில் பல படங்களில் கமிட் ஆனதால் ஆருர்தாசால் பாலாஜி நினைத்தபடி வசனத்தை எழுதி கொடுக்கவில்லை.
அந்த சமயத்தில் தான் ஏ.எல் நாராயணன் பாலாஜி தயாரிக்கும் படங்களுக்கு வசனம் எழுதிக் கொடுத்தார். பல ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சுமார் 17 ஆண்டுகள் கழித்து பாலாஜி ஆரூர் தாசை தொடர்பு கொண்டு தனது அலுவலகத்திற்கு வருமாறு அழைக்கிறார். ஆரூர் தாஸ் தயக்கம் காட்டியதால் அவரது மனைவி போய் என்னவென்று கேட்டு வாருங்கள் என தனது கணவரை அனுப்பி வைக்கிறார். அங்கு வைத்து பாலாஜி விதி படத்திற்கு வசனம் எழுத வேண்டும்.
ஆனால் ஒரு வாரத்திற்குள் அதற்கான வசனத்தை எழுதி முடித்து தாருங்கள் என கேட்டுள்ளார். உங்கள் படத்திற்கு ஏ.எல் நாராயணன் வசனம் எழுதுகிறார். இப்போது நான் எழுதினால் சரியாக இருக்குமா? என ஆரூர் தாஸ் கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி அவர் இந்த படத்திற்கு வசனம் எழுதவில்லை. இது பற்றி ஏற்கனவே பேசி முடிவு எடுக்கப்பட்டது. நீங்கள் வேண்டுமானால் அவரை தொடர்பு கொண்டு கேட்டு அதன் பிறகு விதி படத்திற்கான வசனத்தை எழுதலாம் என பாலாஜி கூறியுள்ளார்.
ஏனென்றால் பாலாஜி ஒரு வாரத்தில் வசனம் எழுதி டிசம்பர் மாதத்திற்குள் ஷூட்டிங் முடித்து ஜனவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டார. இதனை தொடர்ந்து ஆரூர் தாஸ் படத்திற்கான வசனத்தை எழுத ஒப்புக்கொண்டார். உடனே பாலாஜி தனது மேஜையைத் திறந்து உள்ளே 100 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருக்கிறது. உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனை முன் பணமாக வைத்தாலும் சரி சம்பளமாக எடுத்துக் கொண்டாலும் சரி என கூறியுள்ளார். நான் எழுதி முடித்துவிட்டு ஜனவரி மாதம் சம்பளப் பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என ஆரூர் தாஸ் கூறியுள்ளார். அவர் கூறியபடியே சுமார் 7 நாட்களில் விதி பணத்திற்கான வசனத்தை ஆருர்தாஸ் எழுதி முடித்துக் கொடுத்தார். அவர் எழுதிய வசனங்கள் விதி படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் வசனம் எழுதுவதற்கும் ஆரூர் தாசுக்கு வாய்ப்பு கிடைத்தது.
\
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…