CINEMA
ரெடியாகும் அர்ஜுனா விருது பெற்ற கபடி பிளேயர் பயோ பிக்.. மலையாள நடிகையை துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் மாரி..
“பரியேரும் பெருமாள்” படம் மூலமாக தமிழ் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் “மாறி செல்வராஜ்”, பரியேறும் பெருமாள் படம் மூலமாக சமூகத்தில் நடக்கும் வன்கொடுமையை மக்கள் முன்னால் நிறுத்தி மக்களை பார்த்து கேள்வி கேட்கும் படி படத்தை அமைத்திருப்பார், அப்படத்தை பார்த்து எவரும் உணர்ச்சியோ இல்லை எதிர்மறை கருத்து தோன்றும் அளவிற்கு இருக்காது, சற்றே அவர்களின் சிந்தனையிடம் தனக்குள் இருக்கும் ஒருவனிடம் சிந்தித்து கேள்வி கேட்கும் படி செய்தது, படத்தின் கிளைமாக்ஸ் ஒரே ஒரு சீன் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும்.
இப்பட வெற்றிக்குப் பின் நடிகர் தனுஷ் அவர்களை வைத்து “கர்ணன்” என்ற படத்தை இயக்கி தமிழ் திரையுளவிற்கு பரிசளித்துள்ளார், இப்படமும் சமூக மாற்றத்தை உணர்த்தும் முறையாகவே அமைந்திருக்கும், மாரி செல்வராஜ் அவர்களின் நோக்கமும் இதுவே ஆகும். அதன் பின் வைகைப்புயல் வடிவேலுவுடன் நகைச்சுவையான பக்கத்தை தாண்டி தன் ஆழமான நடிப்பை வெளிக்கொண்டு வந்து படம் “மாமன்னன்”. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக இருந்தாலும் இப்படத்தை தூக்கி நிறுத்திருப்பார் வடிவேலு, அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை உருவாக்கியவர் மாறி செல்வராஜ் அவர்கள்.
அதன் பின்னதாக இப்படம் வெற்றியைக் கண்டபின், இவர் ஒரு கபடி களம் மிக்க ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார், அதாவது இந்தியாவுக்காக கபடியில் விளையாடி “அர்ஜுனா அவார்டு” பெற்ற மானதி கணேசன் அவர்களின் பயோபிக்கை கதையாக உருவாக்கி படம் இயக்க உள்ளதாக மாறி செல்வராஜ் தெரிவித்துள்ளார், எப்பொழுதும் மாறி செல்வராஜ் ஒரு படம் இயக்குகிறார் என்றால் படத்தின் கதையின் ஹீரோ யார் என்று மிகவும் எதிர்பார்க்கப்படும், அதேபோல் இப்படத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஒரு மாபெரும் நடிகரை களம் இறக்கி உள்ளார், அவர் நடித்த முதல் படத்தில் தன் நடிப்பு திறமையால் ஆடியன்ஸை கட்டிப்போட்டு படத்தை பார்க்க வைத்த திறமைசாலி இவர்,
இரண்டாவது படத்தில் தன் அப்பாவுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தந்தையை மிஞ்சும் அளவிற்கு தன் திறமையை வெளிக் கொண்டு இருப்பார், அப்படம் “மகான்” ஆகும். அடுத்ததாக இவர் மாறி செல்வராஜ் அவர்களுடன் இணைந்து கபடி விளையாட்டு வீரரான மானதி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு சரிதத்தை நடிக்க உள்ளார் என்று மாரி செல்வராஜ் அறிவித்திருந்தார், இப்படத்தில் துரு விக்ரமுக்கு இணையாக நடிக்க மலையாள நடிகை “தர்ஷனா ராஜேந்திரன்” அவர்கள் இணைந்துள்ளார். தற்போது இப்படத்திற்கான கபடி பயிற்சி துரு விக்ரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது, அதற்கான புகைப்படம் இணையத்தில் மாறி செல்வராஜ் பதிவிட்டு இருக்கிறார், அதை பார்த்த நெட்டிசன்கள் அதை வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.
Arjuna Awardee kabaddi Player #ManathiGanesan BioPic Shooting Starts from March 15th. #mariselvaraj & #DhruvVikram at training session.
Soon will see BlockBuster Movie…….Currently #Trending #TamilCinema pic.twitter.com/rBOQw2NqB6
— VIP Tamil Online (@viptamilonline) February 26, 2024