நீ பெற்ற தாயா?.. மறுமணத்திற்காகக் தடையாக இருந்த குழந்தை… கிணற்றில் வீசப்பட்ட 11 மாத பிஞ்சு உயிர்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… புனேயில் பயங்கரம் சம்பவம்…!!

By Muthu Mani on சித்திரை 9, 2026

Spread the love

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ரஞ்சன்காவ் பகுதியைச் சேர்ந்த பூஜா பவார் (22) என்ற பெண், தனது 11 மாத ஆண் குழந்தையைத் தலையில் மோதி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தனது மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று பூஜாவின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தேடி வந்தனர். இதில் கடந்த 5-ம் தேதி ஜம்புட் கிராமத்தில் மட்டும் தனியாக இருந்த பூஜாவை போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஆரம்பத்தில், குழந்தை தவறி கீழே விழுந்து இறந்ததால் பயத்தில் கிணற்றில் வீசிவிட்டதாகப் பூஜா நாடகமாடினார். இருப்பினும், போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தனது கணவரைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்துகொள்ளத் தான் ஆசைப்பட்டதாகவும், அதற்குத் தனது 11 மாத குழந்தை தடையாக இருந்ததாலும், குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருந்ததாலும் ஆத்திரத்தில் இந்தக் கொடூரத்தைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

   

சம்பவத்தன்று குழந்தையின் தலையைத் துணி துவைக்கும் கல்லில் ஓங்கி மோதி கொலை செய்துவிட்டு, பிணத்தை ஒரு பையில் கட்டி விவசாயக் கிணற்றில் வீசியதாகத் தெரிவித்தார். பூஜா அடையாளம் காட்டிய கிணற்றிலிருந்து குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து, பெற்ற குழந்தையையே கொலை செய்த பூஜா பவாரைக் கொலை வழக்கில் கைது செய்த போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் புனே பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.