முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து, இருவீட்டர் சம்மதத்துடன் 2007ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யாபச்சன் என்று மகள் உள்ளார். இவர் உலக அளவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவர். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடைந்தது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் முன்னணி ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மகளையும் இயக்குனர் மணிரத்னமே ஹீரோயினாக அறிமுகப்படுத்த உள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சன் இவர்களை பற்றி அடிக்கடி விவாகரத்து சர்ச்சை எழுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. தற்பொழுது பாலிவுட் பயில்வான் ரங்கநாதனாக இருக்கும்,உமர் சந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து பேசியுள்ளார். தற்பொழுது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அபிஷேக் பச்சனின் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஒரு ஊடக நிகழ்வில் காணப்பட்ட அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை. இப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதனால் ரசிகர்களும் கவலையடைந்துள்ளனர். ஆனால் ஒரு சிலரோ கையில் மோதிரம் இல்லை என்றால் விவாகரத்து என்று அர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எது உண்மை என்பது அபிஷேக் பச்சன் சொல்ல போகும் பதிலில் தான் உள்ளது. தக்க பதிலடி கொடுத்து பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார் அபிஷேக் பச்சன் என ரசிகர்கள் தற்பொழுது கூறி வருகின்றனர்.
சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவு வில்லன்களுக்கும் இருக்கின்றது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில்…
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் படங்களின்…
நடிகர் சிம்பு கமலஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று பிரபல தயாரிப்பாளரான ஐசரி…
தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து…
இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரசவாதி. இந்த திரைப்படம் குறித்த…
அன்பே சிவம் திரைப்படத்தின் மூலமாக சென்னையில் இருக்கும் மிகப்பெரிய பள்ளி ஒன்றில் தங்கள் மகளுக்கு சீட் கிடைத்ததாக சமீபத்திய பேட்டி…