தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகின்றது. இப்படத்துடன் சினிமாவில் இருந்து ஒதுங்கி முழு நேரமும் அரசியல் தலைவராக செயல்பட இருக்கின்றார். இவர் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவர்களுக்கு கல்வி விருதுகள் என்று பெயரில் விழா நடத்தி பரிசினை வழங்கியிருந்தார்.
கடந்த ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவில் விஜய் கிட்டதட்ட 10 மணி நேரம் நின்று மாணவர்களுக்கு பரிசு வழங்கியிருந்தார். இந்நிலையில் இன்று தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள், விரைவில் சந்திப்போம்” என கூறியிருந்தார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுதி வாரியாக நடிகர் விஜய் பரிசு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அது மட்டுமில்லாமல் இந்த முறை ஒரு தனி சிறப்பு இருக்கின்றது. கடந்த வருடம் அவர் நடிகர் விஜயாக பரிசு வழங்கினார். தற்போது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவராக இதில் பங்கேற்பார் என்று கூறப்படுகின்றது. வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தன்னுடைய 50-வது பிறந்த நாள் என்பதால் அன்றைய தேதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…