Categories: சினிமா

“ஆட்டோகிராஃப் படத்தை மிஸ் பண்ணியதற்காக வருத்தப்பட்டேன், ஆனா ஒரு நல்லது நடந்தது”.. பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்..

Spread the love

தமிழ் சினிமாவின் கதை சொல்லல் முறையில் முத்திரை பதித்த திரைப்படங்களில் ஒன்று ஆட்டோகிராஃப். அதுவரை இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் சேரன் அந்த படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அவரோடு அந்த படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா மற்றும் கனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க செல்லும் சேரன், அவர் வாழ்வில் கடந்து வந்த நபர்களை சந்திப்பதே இந்த படத்தின் கதை. அதில் மையக் கதபாத்திரத்தின் பள்ளிப் பருவ காதல் மற்றும் கல்லூரி கால காதல் என கடக்கும் கதை, அதில் தோல்வியடையும் அந்த மனிதன் எப்படி தன்னுடைய வீழ்ச்சிகளில் இருந்து மீள்கிறான் என்பதே கதை.

இதை மிகவும் கவித்துவமாகவும் நாஸ்டாஜிக் அனுபவத்தோடும் உருவாக்கி இருந்தார் சேரன். அதனால் பெருவாரியான ஆண்களால் இந்த கதையோடு தொடர்புகொள்ள முடிந்தது. இதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சேரன் நடிக்கும் முடிவை எடுப்பதற்கு முன்பாக பல ஹீரோக்களிடம் இந்த கதையை சொல்லியுள்ளார்.

முதலில் நடிகர் விஜய்க்கு இந்த கதையை சொல்லியுள்ளார். ஆனால் அப்போது அவர் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறிக்கொண்டிருந்ததால் இந்த கதையில் அவர் நடிக்க மறுத்துள்ளார். பின்னர் இந்த கதையை நடிகர் பிரபுதேவாவுக்கு சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளார் சேரன். ஆனால் ஷூட்டிங் செல்லும் நேரத்தில் இந்த படத்தில் சேரன் விலகியுள்ளார்.

அதன் பின்னர் பல கதாநாயகர்களுக்கு இந்த கதையை சொல்லியுள்ளார் சேரன். அதில் ஒருவர்தான் 90 களில் பிரபல கதாநாயகனாக இருந்த அரவிந்த் சாமி. ஆனால் அவர் அப்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய வியாபாரத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில்தான் சேரன் ஆட்டோகிராஃப் கதையை சொல்லியுள்ளார்.

அதனால் கதை பிடித்திருந்தும் அவரால் நடிக்க முடியவில்லை. பின்பு ஒரு நேர்காணலில் “தான் ஆட்டோகிராஃப் படத்தை மிஸ் செய்துவிட்டதற்காக வருந்தியதாகவும் ஆனால் அந்த படத்தின் மூலம் சேரன் நடிகராக அறிமுகமானது ஒரு நல்ல விஷயம் ” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago