Categories: சினிமா

திருமணத்திற்கு AR ரஹ்மான் போட்ட 3 கண்டிஷன்கள்… சாய்ரா பானு எப்படி அவர் வாழ்க்கையில் நுழைந்தார் தெரியுமா…?

Spread the love

இசையமைப்பாளர் AR ரஹ்மானுக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த இசையாமைப்பாளர்களுள் ஒருவர் AR ரஹ்மான். தமிழ் சினிமாவை உலக அளவுக்கு எடுத்து சென்வர் AR ரஹ்மான். ஸ்கர் விருது வென்று தமிழகத்தை உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தவர் AR ரஹ்மான். பல திறமைகளை தன்னுள் கொண்டு இருந்தாலும் எளிமையான மனிதராகவே பலராலும் அறியப்படுகிறார் AR ரஹ்மான்.

ஆனால் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி கொண்டிருக்கும் விஷயம் AR ரஹ்மான் தனது மனைவியுடன் விவாகரத்து என்று கூறிய விஷயம் தான். நேற்று இரவு AR ரஹ்மானின் மனைவியான சாய்ரா பானு தனது கணவருடனான 29 வருட திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் எதற்காக இவர்கள் பிரிகிறார்கள் என்ன காரணமாக இருக்கும் ஒரு இடத்திலும் கூட தன் குடும்பத்தை பற்றி தவறாக இதுவரை AR ரஹ்மான் தரப்பில் பேசியதும் கிடையாது. இவர்கள் குடும்பம் சார்ந்த விஷயங்கள் இதுவரை பெரிதாக வெளிவந்ததும் கிடையாது. இது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று பலர் பேசி வருகின்றனர்.

AR ரஹ்மான் திருமணம் எப்படி நடந்தது சாய்ரா பானு எப்படி AR ரஹ்மான் வாழ்க்கையில் நுழைந்தார் திருமணத்திற்கு AR ரஹ்மான் போட்ட மூன்று கண்டிஷன்கள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி இனி காண்போம். AR ரஹ்மான் சினிமாவில் நுழைந்து பிரபலமாகிக் கொண்டிருந்த நேரத்தில் AR ரஹ்மானின் தாயார் கரீனா பேகம் அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பெண் தேடிக் கொண்டிருந்தார்.

திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கும்போதே AR ரஹ்மான் தனக்கு வரப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று மூன்று கண்டிஷன்களை போட்டு இருக்கிறார். அதில் முதலாவது வரக்கூடிய பெண் படிப்பறிவு கொண்டவராகவும் இசையை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவது அனைவரிடமும் மரியாதையுடன் பழக வேண்டும். மூன்றாவது அந்தப் பெண் அழகாக இருக்க வேண்டும் என்ற மூன்று கண்டிஷன்களை தனது தாயாரிடம் கூறியிருக்கிறார் AR ரஹ்மான்.

ஒரு நாள் AR ரஹ்மானின் தாயார் சென்னையில் ஒரு தர்காவிற்கு செல்லும்போது சாய்ரா பானுவை பார்த்தவுடன் அவருக்கு பிடித்து போகிறது. உடனே அவரைப் பற்றி விசாரித்து திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்கிறார் AR ரஹ்மானின் தாயார். தனது 28 வது பிறந்தநாள் அன்று தான் முதன் முதலாக சாய்ரா பானுவை நேரில் சந்தித்தார் AR ரஹ்மான். இருவருக்கும் பிடித்து போய்விடுகிறது.

1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் AR ரஹ்மானுக்கும் சாய்ரா பானுக்கும் திருமணம் நடைபெறுகிறது. அப்போது AR ரஹ்மானுக்கு வயது 27 சாய்ரா பானுவின் வயது 21 ஆகும். அன்றிலிருந்து தற்போது வரை AR ரஹ்மானின் அனைத்து பயணங்களிலும் உறுதுணையாக சாய்ரா பானு இருந்திருக்கிறார். இதை பல நேர்காணல்களில் AR ரஹ்மானே தெரிவித்திருக்கிறார். ஆனாலும் 29 வருடங்கள் கடந்த நிலையில் இவர்கள் பிரிவு என்பது சினிமா வட்டாரங்கள் ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

admin

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

5 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

6 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

6 மணத்தியாலங்கள் ago