Categories: சினிமா

27 வருடங்களுக்கு முன் இறந்த பாடகரின் குரலை ‘லால் சலாம்’ படத்தில் பயன்படுத்திய AR.ரஹ்மான்.. அவர்களது குடும்பத்துக்கு கொடுத்த வெகுமதி.

Spread the love

AI (ARTIFICIAL INTELLIGENCE) டிஎஃப் (DEEP FAKE) போன்ற வீடியோக்களால் பிரபலங்கள் சந்தித்து வரும் சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. சாதாரண ஒருவரின் வீடியோவில் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரபலங்களின் முகங்களை பொருத்தி அவர்கள் செய்தாற் போல பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்த டீப் ஃபேக் வீடியோ மூலம், ராஷ்மிகா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

#image_title

அதேப்போல, பிரதமர் மோடியின் குரலில் தமிழ் பாடல்கள் ஒலிப்பது போன்ற வீடியோக்களும் இணையத்தில் உலா வந்தது. என்ன தான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், ஒருவரின் குரல், முகம், கருத்து போன்றவற்றை அவர்களது உத்தரவு இன்றி பயன்படுத்துவது சட்டப்படி தவறு. அப்படி இருக்கையில், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த பாம்பே பாக்யாவின் குரலை எடுத்து வந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

#image_title

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அவர்களது குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

#image_title

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த அவர்களது குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெற்று, அதற்கு தகுந்த சன்மானமும் வழங்கி உள்ளோம். தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தினால் ஒருபோதும் அது அச்சுறுத்தலாகவும், தொல்லையாகவும் அமையாது” என தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் வெளியான போது நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

Archana

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

4 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

5 மணத்தியாலங்கள் ago