#image_title
முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
கடந்த மாதம் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கியது. முதல் கட்ட படபிடிப்பு மும்முரமாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, 23 ஆண்டுகளுக்கு முன்பு ரமணா படத்தின் ஷூட்டிங் எங்கு நடந்ததோ அதே இடத்தில் தான் தற்போது சிவகார்த்திகேயனின் 23-வது படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது.
23 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில் ஷூட்டிங் நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக ஏ.ஆர் முருகதாஸ் கூறியுள்ளார். விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ரமணா படம் மாபெரும் அளவில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கதாகும்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…