ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் படிப்படியாக உயர்ந்து தற்போது சிறந்த நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நடிகனாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், காக்கி சட்டை, நம்ம வீட்டு பிள்ளை உள்பட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ராணுவ மேஜராக இந்த படத்தில் நடிக்கிறார். முன்னதாக ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் 23-வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தில் ஏ.ஆர் முருகதாஸை டேக்ஸ் செய்து பதிவிட்டிருப்பதாவது, எனது 23-வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…