அனிதா ராதாகிருஷ்ணன் கைதாகி ஜாமீனில் வெளியான கையோடு, விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும் கைது செய்யப்பட்டது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கைதின் போது, மக்கள் பிரதிநிதியான தன்னை கைது செய்வதற்கு முன்பாக பேரவை சபாநாயகரிடம் முன்அனுமதி பெற வேண்டும் என மார்க்கண்டேயன் வாதாடினார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கமளித்துள்ள சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவையின் எல்லைக்குட்பட்ட வளாகத்தினுள் மட்டுமே சபாநாயகரின் அனுமதியின்றி உறுப்பினர்களைக் கைது செய்ய தடை உள்ளது என்றும், பேரவைக்கு வெளியே நடைபெறும் குற்றவியல் சார்ந்த கைது நடவடிக்கைகளுக்கு சபாநாயகரின் முன்அனுமதி தேவையில்லை என்றும் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
