ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கே, வரவிருக்கும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க தவெக தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான தவெகவில் அதிகாரப்பூர்வமாகத் இணைந்தனர்.
தற்போது அந்தந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், கட்சி மாறிய போதிலும் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழும் அதே மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருக்குமே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க பனையூர் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்து கட்சிக்கு வந்தவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையிலும், தொகுதியில் அவர்களுக்குள்ள கள அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் விஜய் இந்தத் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…