தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியில் உள்ளன. அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறி இருந்ததால் இபிஎஸ் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டார். இதனால் தொடர்ந்து அதிமுகவில் மோதல் அதிகரித்து வருகிறது.
இதனிடையே அதிமுகவைத் தொடர்ந்து தற்போது பாஜகவிலும் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதாவது பாஜக மற்றும் அதன் கூட்டணியை நயினார் நாகேந்திரனை விட அண்ணாமலை தான் சிறப்பாக வழி நடத்தினார் என்ற பேச்சுகள் எழுந்ததால் இருவருக்கும் இடையே பணிப்போர் நிலவுவதாக பேசப்படுகிறது. இதனால் கடுப்பான நயினார் நாகேந்திரன், சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளாராம். இதனை அறிந்த அண்ணாமலை தரப்பு மேலும் சூடாகி டெல்லி தலைமையிடம் ரிப்போர்ட் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜகவின் அண்ணாமலை திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணி வலிமையாக இருப்பதாகவும் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் இரண்டாவது இடம் பிடிக்கலாம் என தெரிவித்த அவர், தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறும் வலிமை பாஜகவுக்கு இல்லை என்று கூறியுள்ளார். அண்ணாமலையின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…
மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…
புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக…
சமூக வலைதளங்களில் ஒரு பள்ளிச் சிறுமி தனது ஆசிரியையிடம் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை…
மகனுக்கும் தாய்க்கும் இடையிலான பாசப் பிணைப்பை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகன்…