பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தின் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தலைமையகப் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இந்த விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
