FLASH NEWS: “அடுத்து பெரிய சம்பவம் இருக்கு”…. அன்புமணி உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு….. சற்றுமுன் அரசியலில் புதிய புயல்….!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

தமிழகத்தில் ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தீவிரப் பணியாற்றி வரும் அண்ணாமலை, அதனை விரைவில் முழுமையான அரசியல் கட்சியாக மாற்றும் இலக்கோடு செயல்பட்டு வருகிறார். குறுகிய காலத்திலேயே 20 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைத் தனது இயக்கத்தில் இணைத்துள்ள அவர், 50 லட்சம் உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டியதும் இதனைப் புதிய அரசியல் கட்சியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியல் தளத்தில் மாற்றுச் சக்தியாக உருவெடுக்க முயற்சிக்கும் இச்சூழலில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் MP மற்றும் அண்ணாமலை ஆகியோரின் சந்திப்புகள் மாநிலத்தின் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் இந்தியா டுடே தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற ‘காவிரி நீர் – மேகதாது’ தொடர்பான சிறப்பு கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் ‘வி தி லீடர்ஸ்’ ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராகத் தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாப்பது குறித்து இருவரும் தீவிர விவாதங்களை முன்வைத்தனர். மேகதாது விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மாநிலத்தின் குடிநீர் உரிமையையும் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் இருவரும் உறுதியான நிலையை வெளிப்படுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.