அண்ணாமலையின் ‘WeTheLeaders’ அமைப்பு, ஒரு முழுமையான அரசியல் கட்சியாகத் தங்களைப் பதிவு செய்வதற்கான பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, வரும் ஜூலை 19ஆம் தேதி திருச்செந்தூரில் அண்ணாமலை தலைமையில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழர் நலம் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பல்வேறு களப்பணிகளில் இறங்கவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் நேரடியாகக் களம் கண்டு போட்டியிடவும் இவ்வமைப்பு தற்போதே வியூகங்களை வகுத்து வருகிறது.
