நடிகை அஞ்சலி தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும், அவர் இனி படங்களில் நடிக்கபோவதில்லை என்றும் சமூகவளைதலங்களில் பரவி வருகிறது. நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். தமிழில் இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் நடிகர் ஜிவாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். இப்படம் அவருக்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா போன்ற பல வெற்றி படங்களாக அமைந்தது.
தற்போது அவர் ராம் இயக்கத்தில் “ஏழு கடல் ஏழு மலை” மலையால நடிகர் நிவின்பாலியுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் Game Changer படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவரை பற்றிய வதந்திகளும் வந்துகொண்டுதான் இருந்தன. அதனை கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து நடித்து வந்தநிலையில் சமீபத்தில் அவருக்கு தொழிலதிபருடன் இரகசிய திருமணம் என்ற செய்தி பரவல பேசப்பட்டது.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமண வதந்திகளைப்பற்றி கூறியுள்ளார். அதில் அவர் எனக்கு சினிமா துறையில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். என்னை யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள். முதலில் நான் நடிகர் ஜெய்யை காதலிப்பதாக வதந்தியை பரப்பினார்கள். இப்போது தொழிலதிபருடன் இரகசிய திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் கூருகிரார்கள். எனக்கே தெரியாமல் எனக்கு திருமணமா? என்று சிரிப்புதான் வந்தது. மேலும் நடிகை என்பதால் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதுகிறார்கள் என கூறி வருத்தப்பட்டார்.