திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்பட்டு, நிர்வாகிகளுக்கு 70 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் 70 வயதைக் கடந்த 13 மூத்த நிர்வாகிகள் தங்களது மாவட்டச் செயலாளர் பதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில், மாவட்டச் செயலாளர் பதவியை இழக்கவுள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பைக் கைப்பற்றத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருவதாகக் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்காகக் கட்சியின் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மூலமாக திமுக தலைமைக்குத் தூது அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், கட்சியில் தனக்கான முக்கியத்துவத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதற்காகவும் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போது திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் உட்படப் பல மூத்த தலைவர்களும் அந்த இடத்தைப் பிடிக்கக் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…