தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
உலகம் முழுவதும் ரிலீசான முதல் நாளே 148.5 கோடி வசூலித்து சாதனையும் படைத்தது. 250 முதல் 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 12 நாள் முடிவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூவித்துள்ளது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகமாகும் என்றும் கூறி வருகின்றனர். எனவே நேற்று முன்தினம் லியோ வெற்றி விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 6000 பேர் கலந்துகொள்ள நிகழ்ச்சி நடந்தது.
இந்த வெற்றி விழாவில் விஜய், திரிஷா, மிஸ்கின், அர்ஜுன், கௌதமேனன், மன்சூர் அலிகான், பிக் பாஸ் ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டின் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமினாஸ், கலை இயக்குனர் சதீஷ்குமார் நடிகர் விஜய்யின் தாய் சோபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த இசையமைப்பாளர் அனிருத் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இதற்கான உண்மைக்காரணம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இசையமைப்பாளர் அனிருத் லியோ படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். அதனால் அந்த வேளைகளில் பிசியாக இருப்பதால் லியோ வெற்றி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.