பாமகவில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இன்னும் இவர்கள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு நேற்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார். ராமதாஸ், அன்புமணி மோதல்போக்கு காரணமாக அக்கட்சியினர் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
