“தைலாபுரத்தில் திடீர் திருப்பம்”…. ராமதாஸை சந்திக்க ஓடும் அன்புமணி…. 2 ஆண்டு கால மோதலுக்கு எண்ட் கார்டு…!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த தந்தை – மகன் இடையேயான அரசியல் மோதல் விரைவில் ஒரு முடிவுக்கு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. தனது பெற்றோரின் திருமண நாளை முன்னிட்டு, கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று, தனது குடும்பத்தினருடன் நிறுவனர் ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிகழும் இந்தச் சந்திப்பு, வெறும் குடும்ப ரீதியான தனிப்பட்ட நிகழ்வாகவே கடந்துபோகுமா அல்லது கட்சியை மீண்டும் வலுப்படுத்த இரு தரப்பும் கைகோர்ப்பதற்கான சமிக்ஞையா என்ற விவாதம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் திடீர் நகர்வு பாமக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது கட்சியின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்குமா என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.