தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோக காலக்கெடு டிசம்பர் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 14-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன் அவகாசம் நாளை ) முடிவடைய இருந்தது.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், விருப்ப மனுக்களைப் பெற்று சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை டிசம்பர் 27 வரை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
