Connect with us

CINEMA

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் அன்பே வா. இதில் கதாநாயகனாக நடித்து வருபவர் விராட். இந்த சீரியல் மூலமாக இவருக்கு அதிக அளவு ரசிகர்கள் கிடைத்தது. சமீபத்தில் விராட்க்கும் நவீனா என்பவருக்கும் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

   

விராட் திருமணம் செய்திருக்கும் மணப்பெண் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட். செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கும் இவருக்கும் விரட்டுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய விராட் தனது மனைவி குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

அதாவது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. அவரும் தோலுக்கு மேல் வளர்ந்திருக்கின்றார். அப்படி இருக்கையில் இவரை ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்பதை பேசி இருந்தார். ஒரு பெண்ணை பார்த்தால் இவர்தான் நமக்கு சரியாக இருப்பார் என்று தோன்றும், அது எனக்கு இவரிடம் தோன்றியது.

இவருடைய பழைய வாழ்க்கை பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு 18 வயதிலேயே திருமணம் நடந்து முடித்து விட்டது. அவருடன் வாழ்ந்த வாழ்க்கை பிடிக்காமல் தனியாக வாழ்ந்து குழந்தையையும் வளர்த்து வருகிறார். எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கின்றது. அதனால் திருமணம் செய்து கொண்டேன். இது குறித்து மற்றவர்கள் யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என்று பேசியிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top