இந்தியாவில் தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதாவது, “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வருடம் தீபாவளியை முன்கூட்டியே கொண்டு வந்து விட்டார். இதனால் அவருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். ட்ரம்ப் செய்த காரியத்தால் பங்குச்சந்தை உயர ஆரம்பித்துவிட்டது. அமெரிக்க மட்டுமல்லாமல் உலகளவில் பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்துவிட்டது. டாலர் மதிப்பு உயர்ந்துவிட்டது.
இதனால் கச்சா எண்ணெய் சரிய ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலையும் கொஞ்சம் குறைகிறது. இதனால் டாலர் மதிப்பு அதிகரித்தது. ஆனால் ஜூலை மாதமே வட்டி விகிதம் குறைக்கலாம் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி சொன்னதால் டாலர் மதிப்பு அதிகரிக்கவில்லை. இந்த சூழலில் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. 200 முதல் 300 வரை கூட குறையலாம். இது இந்தியாவிற்கு நல்ல செய்தி. மேலும் கச்சா எண்ணெய் விலையும் குறையும் என்று கூறியுள்ளார்.
