அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இருப்பினும், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. தற்போது ஈரான் தனது யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டியுள்ளது. ஒருவேளை அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கினால், அதை அணு ஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான 90 சதவீத செறிவூட்டல் அளவிற்கு உயர்த்துவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரானின் நாடாளுமன்ற கமிஷன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்கா மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தினால், 90 சதவீத யுரேனிய செறிவூட்டலைத் தொடங்குவது ஈரானின் முதன்மையான விருப்பங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விரிவான ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…