மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியில் பாடப்பட்டது கலாசார மோதலை ஏற்படுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாதுத்தில் வழக்கு தொடரப்பட்டது. விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலாவதாக பாட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. எனினும், ஒரு விழாவில் எந்தப் பாடலை முதலில் பாட வேண்டும், எதை அடுத்ததாகப் பாட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
மேலும், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி இந்த வழக்கில் எந்தவொரு கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக, நிர்வாக ரீதியிலான இத்தகைய பாடல் வரிசை நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி இந்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
